திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த 39 வயதான பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரை தேடிச் சென்ற வேலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக இன்று(11) மீட்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் ஆன படியினால் உயிரிழந்தவரின் உடல் உறுப்புக்கள் சிதைந்து காணப்படுகின்றன சில பகுதிகள் காட்டு மிருகங்களால் வேட்டையாடப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் ,கந்தளாய் திடீர் மரண விசாரனை அதிகாரி உள்ளிட்டோர் சடலம் காணப்படும் இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM