இலத்தீன் அமெரிக்காவில் வெள்ள அனர்த்தம் காரணமாக குறைந்தது 5 பேர் பலியானதுடன் 155,500 பேர் வீடுவாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த வெள்ள அனர்த்தத்தால் பராகுவே, ஆர்ஜென்டீனா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பராகுவேயில் மட்டும் சுமார் 130,000 பேர் வீடுவாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
அந்நாட்டு ஜனாதிபதி ஹொராசியோ கார்டெஸ் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தி அனர்த்த நிதியாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பராகுவேயில் அஸன்சியன் நகரையும் அயல்நாடான பிரேசிலிலுள்ள பொஸ் டி இகுவாஸுவையும் இணைக்கும் சர்வதேச பாதையில் பயணித்த மூவர் மரமொன்று அவர்களது வாகனத்தின் மீது சரிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அந்நாட்டின் தலைநகரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் சரிந்து விழுந்த மரமொன்றின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற இதையொத்த சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதாக தேசிய அவசரகால செயலகம் தெரிவிக்கிறது.
ஆர்ஜென்டீனாவில் மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக குறைந்தது 20,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
என்ட்றி றியொஸ் மாகாணத்தில் உருகுவே ஆற்றுக்கு அருகில் வசிப்பவர்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகிழக்கு ஆர்ஜென்டீனாவில் புயலால் பாதிக்கப்பட்டிருந்த தனது வீட்டிற்கு செல்ல முயன்ற 13 வயது சிறுவன் ஒருவன் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளான்.
அதேசமயம் உருகுவேயில் வெள்ள அனர்த் தத்தால் குறைந்தது 5,500 பேர் இடம் பெயர்ந் துள்ளனர்.
இந்நாட்டில் இந்த வெள்ள அனர்த்தத்தை யொட்டி அவசரகால நிலைமை பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM