ஆர்க்டிக் விவகாரங்களில் ரஷ்யாவுடனான கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. மேலும் எரிசக்தி துறையிலும் ஒத்துழைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொண்ட கிழக்குப் பொருளாதார மன்ற அமர்வில் மெய்நிகர் ஊடான உரையில்,
தொடக்கத்திலிருந்தே இராஜதந்திரம் மற்றும் கலந்துரையாடல்களின் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். உக்ரைன் மோதல் மற்றும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து அமைதியான முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது.
2019 ஆம் ஆண்டு நடந்த மன்ற உச்சிமாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த மோடி, அந்த நேரத்தில் இந்தியா தனது 'ஆக்ட் ஃபார் ஈஸ்ட்' கொள்கையை அறிவித்ததாகவும், அதன் விளைவாக, பல்வேறு துறைகளில் ரஷ்ய தூர கிழக்குடன் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கொள்கை இப்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 'சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டுறவின்' முக்கிய தூணாக மாறியுள்ளதாகவும் கூறினார்.
விளாடிவோஸ்டாக்கில் இந்திய துணைத் தூதரகம் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நகரத்தில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு இந்தியா. அப்போதிருந்து, இந்த நகரம் எங்கள் உறவில் பல மைல்கற்களுக்கு சாட்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM