(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற விவாதத்தின் போது சுயாதீனமாக செயற்படும் டலஸ் அழகபெரும உள்ளிட்ட தரப்பினருக்கு உரிய காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மை உள்ளது. ஆகவே நேர ஒதுக்கீட்டில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தர்க்கம் செல்லுபடியற்றதாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேருக்கு பாராளுமன்ற விவாதத்தின் போது உரையாற்ற உரிய காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கமைய விவாத நேர ஒதுக்கீட்டின் போது ஆளும் தரப்பினருக்கு 40 சதவீதமும்,எதிர்தரப்பினருக்கு 60 சதவீதமும் வழங்கப்படும்.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலை தொடர்ந்து இம்முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. பொதுஜன பெரமுன பெரும்பான்மையிலான உறுப்பினர்களை கொண்டுள்ளது.
ஆகவே ஆளும் தரப்பினருக்கு விவாதத்தின் போது அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு நேர ஒதுக்கீட்டில் 60 சதவீதம் ஆளும் தரப்பினருக்கும், 40 சதவீதம் எதிர்தரப்பினருக்கும் வழங்கப்படும் வகையில் பாராளுமன்ற சம்பிரதாயம் மாற்றியமைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறார்கள். ஆகவே அனைவருக்கும் சமமான காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.
பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கு அதிக பெரும்பான்மை உள்ளது. ஆகவே விவாதத்தின் போது அவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தர்க்கம் இனி செல்லுப்படியற்றதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM