அமெரிக்காவிலுள்ள பாடசாலையொன்றின் 37 வயதான ஆசிரியை ஒருவர், 15 வயதான மாணவனை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமண்டா டோல் எனும் இப்பெண், வட கரோலினா மாநிலத்தின் பென்சன் நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர்.
அதே பாடசாலையைச் சேர்ந்த 15 வயதான மாணவன் ஒருவனை அமண்டா வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (03) அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு பிணைத் தொகையாக ஒரு மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிணைத் தொகையை குறைத்தால் தான் வீடு திரும்பி தனது பிள்ளைகளுடன் இணைந்து கொள்ள முடியும் எனக் கூறிய அமண்டா டோல், பிணைத் தொகையைக் குறைக்குமாறு நீதிபதியிடம் கோரினார். எனினும், அக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM