(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு- கருவாத்தோட்டம் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஜேராம மாவத்தையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த வரவாராவர்.
கார் சாரதியின் கவனயீனம் விபத்துக்கு காரணம் என்றும் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM