உக்ரேன் நாட்டைச் சேர்ந்த அலோனா புர்மாகா என்ற பெண், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலில் செகேய் நிவோகோவ் என்ற நபரை சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலரவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதில் செகேய் நிவோகோவ் ரஷிய நாட்டில் பிறந்து இஸ்ரேல் நாட்டிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த காதல் ஜோடி இருவரும் இந்தியா வந்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற இந்த காதல் ஜோடிக்கு, இந்திய கலாச்சாரம் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே உக்ரேன்-ரஷ்யா இடையே போர் தொடங்கியதால், இந்தியாவிலேயே இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் தர்மசாலா மேஜிஸ்திரேட் அலுவலகத்தில் இவர்களது திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.
'சிறப்பு திருமணச் சட்டம்' (பிரிவு 11) மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த இருவரது திருமணமும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மணமகன் செர்கேய் நிகோவ் கூறுகையில், ரஷ்யாவும் உக்ரைனும் ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்தனர் என்றும் அரசுகளுக்கு இடையே தான் சண்டை நடைபெறுகிறது, மக்களிடையே இல்லை என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM