ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தோரது 11 ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெறவுள்ளன.
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்ததமது உறவுகளை நினைவு கூர்ந்து ஆலயங்களிலும் விசேட பூசை நிகழ்வுகளை நடத்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கிழக்கில் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் நினைவுத்தூபிகள் மற்றும் நினைவிடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடை பெறவுள்ளன.
வடக்கில் பிரதான நிகழ்வு வடமராட்சி உடுத்துறை நினைவிடச் சதுக்கத்தில் இன்று காலை 8.55 மணிக்கு ஆரம்பமாகும். நினைவிடச் சதுக்கத்தில் காலை 9.20 தொடக்கம் 9.25 மணி வரையில் பொது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதும் ஆழிப் பேரலையில்
உயிரிழந்த அனைவருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டும். தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமகாலத்தில் உயிரிழந்தோரின் கல்லறைகளுக்கு முன்பாக உறவுகள் சுடர் ஏற்றி, பட்சணங்கள் படைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தில் யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு, வடமராட்சி வடக்கு பிரதேச கரையோரப் பகுதிகளில் 1,200 க்கும் அதிகமானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பெருமளவிலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து அழிந்து பெரும் சொத்துக்களும் நாசமடைந்திருந்தன.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் போக 14 ஆயிரத்து 285 பேர் இடம்பெயர்ந்திருந்தனர். 1647 பேர் படுகாயமடைந்திருந்தனர். 10 பேர் காணாமல் போயிருந்தனர். 217 சிறுவர்கள் தாயை இழந்தனர். 165 சிறுவர்கள் தந்தையை இழந்திருந்தனர். 40 சிறுவர்கள் தாய், தந்தையரை இழந்திருந்தனர். 55 பெண்கள் விதவைகளாகியிருந்தனர்.
வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேசசெயலாளர் பிரிவில் 3 ஆயிரத்து 509 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 26 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டிருந்தன. வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 532 வீடுகள் முழுமையாகவும் 73 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன. இரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மொத்தமாக 7 ஆயிரத்து 41 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 99 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.
வாழ்வாதாரத்துறையான மீன் பிடி பாதிக்கப்பட்டதனால் 6 ஆயிரத்து 497 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 64 பேர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். நன்நீர் உவர் நீராகியதால் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டதுடன் பயிரழிவுகளும் ஏற்பட்டன. இதனால் 111.5 ஏக்கரில் 318 விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேசத்தில் 153 தனியார் வியாபார நிலையங்களும் 106 சுய தொழில் முயற்சியாளர்களும் ஏனைய தொழில் முயற்சியாளர்கள் 253 பேரும் பாதிக்கப்பட்டனர். உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் உடுத்துறை நினைவிடத்தில் இடம்பெறு பிரதான நிகழ்வுகளுடன் 72 பேரை நல்லடக்கம் செய்யப்பட்ட மணற்காடு சவக்காலைப் பிட்டி மற்றும் சில எண்ணிக்கையானோரை நல்லடக்கம் செய்யப்பட்ட வெற்றிலைக்கேணி கட்டைக்காடு செம்பியன்பற்று புலோலி சூசையப்பர் சேமக்சாலை ஆகிய இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும்.
அத்துடன் வடமராட்சி, வடக்கு கிழக்குப் பிரதேச இந்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM