மட்டக்களப்பு, ஏறாவூர் நகர் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் நகர சபைக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டபோது இந்த விபத்து சம்பவித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடியிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஏறாவூர் நகரில் பிரதான வீதிக்குக் குறுக்கே சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் காரரால் மோதப்பட்டு பலத்த அடிபட்டு வீதியில் விழுந்தனர்.
ஹோட்டல் உரிமையாளரான பாவா லேன், காத்தான்குடி-06 ஐச் சேர்ந்த ஆதம்லெப்பை முஹம்மது ஷாஜஹான் (வயது 39) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், சென்றல் வீதி, இரண்டாம் குறுக்கு புதிய காத்தான்குடி-03, ஐச் சேர்ந்த எம்.முஹம்மது ஷயீட் (வயது 38) காயமடைந்த நிலையிலும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
முறையற்ற விதத்தில் பிரதான வீதிக்குக் குறுக்கே மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாகக் சந்தேகிக்கப்படும் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
-அப்துல் கையூம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM