(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது , வெகுவிரைவில் ஏதாவதொரு தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். வரவிருக்கும் தேர்தல் எதுவாயினும், அதில் போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் இயலுமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹரகமவில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்காக யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் சார்ந்த விடயங்களுக்காகவே கட்சி யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுள்ளன. குறித்த யாப்பு ஒரு எதிர்ப்பு வாக்கு கூட இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
முற்போக்கான கட்சிகளுடன் இணைந்து பாரிய அரசியல் கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாக அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே எமது இலக்காகும். தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கத்துவம் வகிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் உதவுவதற்கும் நாம் இதனைத் தெரிவிக்கவில்லை. 100 ரூபாவிற்காக 10 வயது சிறுவனை கத்தியால் தாக்கும் மனநிலைக்கு மக்களை கொண்டுள்ள இந்த சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாம் அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப் போவதில்லை.
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது விரைவில் நிச்சயம் ஏதாவதொரு தேர்தல் இடம்பெறும். வரவிருக்கும் தேர்தல் எதுவானாலும் அதில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய இயலுமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு காணப்படுகிறது. அது கடினமானது என்ற போதிலும் , அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் அந்த முயற்சியும் வெற்றியளிக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM