(எம்.மனோசித்ரா)
திங்கட்கிழமை முதல் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். உலக சந்தையில் எரிபொருள் விலையின் அடிப்படையில் விலை சூத்திரத்திற்கு அமைவாக புதிய விலைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதுவரையில் 50 சுமார் 50 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஏற்கனவே காணப்பட்ட 'வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் செயலியை (Home Delivery App)' மீண்டும் செயற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.
இதுதவிர வெளிநாடுகளிலுள்ளவர்கள், எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கையிலுள்ள தமது உறவினர்களுக்கு லிட்ரோ சிலிண்டர்களை பெற்றுக் கொடுப்பதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய வெளிநாடுகளிலுள்ளவர்கள் சிலிண்டர்களுக்கான டொலர்களை செலுத்திய பின்னர், அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏனைய போட்டி நிறுவனங்களை விட குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். குறைக்கப்படும் விலைகள் திங்களன்று அறிவிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM