கன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதை அறிந்தேன், அதனை பெற்றுக்கொள்வதாற்காக எனது இரு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என எனது மனைவியிடம் கூறினேன், அப்போது கதவுகளும் மூடப்பட்டிருந்தன, விடயத்தை மனைவியிடம்கூறி கேட்ட போது மனைவி அதனை ஏற்றுக்கொள்ளவிலலை, இதனால் எமக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது, அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது என இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிக்கொன்ற கொலை சந்தேக நபரான ராஜலஷ்மன் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
கிளிக்குஞ்சு மலை பிரதேசத்தில் இரு பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவரான ராஜலஷ்மன் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
இரண்டு பிள்ளைகளையும் மஞ்சள் நீரில் குளிக்க வைத்து மனைவிக்கு தெரியாத வாறே தான் இடுப்பில் வாளை மறைத்து கொண்டு செனறதாகவும் சந்தேகநப ரான ராஜலக்ஷ்மன் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதேவேளை, சிரார்களை வெட்டி கொலை செய்து அவர்களின் இரத்தத்தை வீட்டின் நான்கு மூலைகளிலும் கொட்டியிருந்ததாகவும் தெரியவருகின்றது.
சந்தேகநபரான ராஜலக்ஷ்மனின் மனைவி கடந்த மூன்று தினங்க ளுக்கு முன்னர் தனது சகோதரி யிடம், கணவரான ராஜலஷ்மன் புதையல் பைத்தியத்துடன் திரிகின்றான். என்றும் பிள்ளைகளுக்கு ஏதேனும் நடந்து விடுமோ என அச்சத்து டன் கூறியதாகவும் உயிரிழந்த நித்தியாவின் சகோதரியின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை சந்தேக நபரான ராஜலஷ் மன் மேசன் வேலை செய்து வருவதாகவும் கடந்த 07 மாதங்களாக எவ்வித தொழில்களுக்கும் செல்லாமல் வீட்டில் அதிகளவில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அவரது நண்பரான கே.கஜேந்திரன் (38வயது) தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM