யாழ்ப்பாணம், கொக்குவில் தென்கிழக்கு தலையாழிப் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத கும்பலொன்று அங்கிருந்த ஜனாதிபதி, பிரதமரின் படங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகையினை அடித்து நொருக்கியுள் ளது. இச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் மாலை 6மணியளவில் கொக்குவில் தலையாழி பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தின் மாலை கொக்குவில் பகுதியில் உள்ள தலையாழி வைரவர் ஆலயத்திற்க முன்பாக உள்ள இந்திரா சனசமூக நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய சிலர் அங்கு நின்று தகாத வார்த்தைகளை பேசி அவ் வீதியால் செல்பவர்களை திட்டியிருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த சனசமூக நிலையத்தின் கட்டட நிர்மாணத்திற்காக நிதி வழங்கப்பட்டமைக்காக அரசாங்கத்தினால் அங்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகையினையும் அவர்கள் அடித்து நாசம் செய்துள்ளனர்.
மேலும் சனசமூக நிலையத்தினையும் அடித்து நெருக்கு முற்பட்ட இவர்கள் அதே சனசமூக நிலையத்தின் கட்டடத்தில் உள்ள ஜே123 கிராம சேவகர் அலுவலகத்தினையும் இவர்கள் நாசம் செய்திருந்தனர்.
அத்துடன் குறித்த ஆலயத்தின் அறநெறிப் பாடசாலையின் பெயர் பலகையினையும் அவர்கள் அடித்து நொருக்கி நாசம் செய்ததுடன், ஆலயத்தின் நின்றவர்களுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு வந்து சென்றவர்களுடனும் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளனர். இவர்களின் அட்டகாசத்தினை தாங்கிக் கொள்ள முடியாத பொது மக்கள் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு அட்டகாசம் புரிந்தவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் சமரசம் பேசி, அங்கிருந்து பாதுகாப்பாக அவர்களை வழியனுப்பி வைத்திருந்தனர் என்று சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM