( எம்.எப்.எம்.பஸீர்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று ( 31)பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்தை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த 28 பேர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், சாலிய பீரிஸ் உள்ளிட்டோருடன் சட்டத்தரணிகளான நுவன் போப்பகே, ஜயந்த தெஹி அத்தகே உள்ளிட்ட பெருமளவான சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி பிணை கோரிக்கை முன் வைத்தனர். இதனையடுத்தே சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானையில் நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இந்த 28 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM