(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தலைமைத்துவ பதவியில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஏனைய பதவிகளுக்கான நியமனங்கள் கட்சி மாநாட்டின் போது அறிவிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தற்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளர் அல்ல. அவர் கட்சியின் எந்தவொரு செயற்பாடுகளிலும் இணைத்துக் கொள்ளப்படுவதுமில்லை. அவர் எந்த காரணத்திற்காக இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என்பது எமக்கு புரியவில்லை.
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுகின்றார்.
வெற்றிடமாகியுள்ள பதவிகளுக்கான நியமனங்கள கட்சியின் மாநாட்டின் போது அறிவிக்கப்படும். அதனை தற்போது ஊடகங்களுக்கு அறிவிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM