நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம் வாழ்வுக்காக உணவு(FOOD FOR LIFE) உலக அமைப்புடன் இணைந்து கடந்த 07.06.2002 முதல் மக்களுக்கு தினமும் ஒரு வேளை உணவை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானம் குறைந்து துன்பப்படும் மக்களுக்கு தினமும் ஒருவேளை உணவை இலவசமாக வழங்கி சிறிதளவேனும் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தின் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம் இந்த செயற்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
அண்மைக்காலத்தில் மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்ளை பெற வரிசையில் நின்று இன்னல்களை அனுபவித்த மக்களில் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வாழும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தினமும் சமைத்த உணவை இலங்கை கிருஷ்ண பக்திக்கழகம் வழங்கியது.
இந்த செயற்பாட்டிற்கு வாழ்வுக்காக உணவு (FOOD FOR LIFE GLOBAL) உலக அமைப்பு இலங்கை கிருஷ்ண பக்திக் கழகத்துடன் இணைந்து இந்த இலவச உணவு வழங்கும் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.
கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீP ராதா கிருஷ்ணா ஆலயத்தை அண்மித்துள்ள பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த மக்களின் குடும்பங்களில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு உதவிக் கரம் வழங்கும் நோக்குடன் அப் பிரதேசத்தில் உள்ள 300க்கு மெற்பட்ட மக்களுக்கு தினமும் டோக்கன்களை வழங்கி, சுழற்சி முறையில் இலவசமாக சமைத்த உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மனிதாபிமான செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்திற்கு (ISKCON Sri Lanka) மனித நேயம்மிக்க பலரும், மற்றும் கிருஷ்ண பக்தி கழகஅங்கத்தவர்களும் மனமுவந்து நன்கொடைகளைவழங்கி வருகின்றனர்.
அவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருட்கடாட்சம் கிடைக்க பிரார்த்திக்கிறோம். அத்துடன் வாழ்வுக்காக உணவு உலக அமைப்பு (FOOD FOR LIFE GLOBAL) 2000 அமெரிக்க டொலர்களை மானிய (GRANT) உதவியாக வழங்கி பேருதவி புரிந்து வருகின்றது.
பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்களுக்கு இந்த மனிதாபிமானமிக்க உதவியை மக்களின் வாழ்வு சீரடையும்வரை தொடர்ந்து செய்வதற்கே கிருஷ்ண பக்திக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மனித நேயமிக்க நல் உள்ளங்கள் இந்தப்பணியில் இணைந்துகொண்டு உதவி நல்க முன்வருமாரும் கிருஷ்ணபக்திக்கழகம் வேண்டுகோள் விடுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM