இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று 31 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
14 ஆவது இந்தியா - ஐக்கிய அரபு இராஜ்ஜிய கூட்டு ஆணைக்குழு கூட்டம் மற்றும் 3 ஆவது இந்தியா - ஐக்கிய அரபு இராஜ்ஜிய மூலோபாய வியூக உரையாடலுக்கும் தலைமை தாங்குகிறார்.
இந்த சந்திப்புகள், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மை மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்ய இருதரப்பும் ஆர்வத்துடன் உள்ளது.
மேலும் இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர் மட்ட சந்திப்புகளிலும் கலந்துக்கொள்ள உள்ளார்.
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையில் வழக்கமான உயர்மட்ட தொடர்புகள் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 28 ஆம் திகதி அபுதாபிக்கு விஜயம் செய்தார். இதன் போது ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்திருந்தார்.
இதற்கு முன்னதாக, இரு தலைவர்களும் பெப்;ரவரி 18 திகதி மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தினர், இதன் போது இந்தியா- ஐக்கிய அரபு இராஜ்ஜிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வர்த்தகம், முதலீடு, மரபு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, விண்வெளி, தூதரக விவகாரங்கள் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் கூட்டாண்மையில் முன்னேற இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்களும் உறுதிபூண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM