(எம்.வை.எம்.சியாம்)
வெல்லவாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு காயமடைந்துள்ளதோடு துப்பாக்கி சூடு நடத்திய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 3 இலக்க கட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் மற்றும் துப்பாக்கிதாரிக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்தவர் 18 வயதுடைய ஆனப்பல்லம, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் அவர் மொனராகல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
துப்பாக்கி சூடு நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 35 வயதுடைய வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் வெல்வாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM