(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
வட் வரி அதிகரிப்பானது அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதுடன், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணங்களும் இந்த வரி அதிகரிப்பின் ஊடாக கிடைக்காது போய்விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்ப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரவு செலவுத் திட்டத்தில் வட் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருமான விரியாக நூற்றுக்கு இரண்டரை வீதம் அறவிட தீர்மானிக்கப்பட்டிரு்கின்றது.
இதனால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இந்த வரி அதிகரிப்பின் ஊடாக இல்லாமல் போய்விடும். இது நேரடியான வரி அல்ல என்பதனால் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும்.
ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இதில் இருக்காது. இதன்படி வறுமை நிலைமையில் உள்ளவர்களுக்கு இதில் சலுகை கிடைக்கப் போவதில்லை.
அத்துடன் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவீனங்களை குறைப்பதே நோக்கமாக உள்ளது. ஆனால் பாதுகாப்பு செலவினம் இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தை விடவும் அதிகரித்துள்ளது. இதன்படி குறைக்கப்பட வேண்டிய முக்கியமான செலவினங்கள் குறைக்கப்படாது உள்ளன.
குறிப்பாக அனைவரையும் பாதிக்கும் மறைமுக வரிகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரி அதிகரிப்பால் அந்த நிவாரணங்களும் கிடைக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM