வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

Published By: Vishnu

30 Aug, 2022 | 04:52 PM
image

(கே.பி.சதீஸ்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் பேரணி ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரின் ஊடாக பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்ததுடன் அவ்விடத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை தாங்கியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர். 

இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19