ஊழல்வாதிகளுக்கு அரச வரப்பிரசாதங்கள் கிடைப்பதை மக்கள் எதிர்க்கின்றனர் - வெல்கம ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: Digital Desk 5

30 Aug, 2022 | 12:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊழல்வாதிகள்,கொலைகாரர்கள்,கொள்ளைகார்கள் மற்றும் அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்குவதற்கும், அரச வரபிரசாதங்களை வழங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நாட்டு மக்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் தற்போது மிக தெளிவாக உள்ளார்கள்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுத்தால் ஆட்சியில் நிலைத்து நிற்க முடியும் என சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டரை வருட காலத்தில் அரச தலைவரின் தவறான மற்றும் முட்டாள்தனமான தீர்மானங்களினால் நாடும்,நாட்டு மக்களும் மிக மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளமை ஒன்றும் இரகசியமானதொரு விடயமல்ல  உங்களின் வசமுள்ள ,அரசியல் அனுபவம்,சர்வதேச அங்கிகாரம், உண்மை தன்மை ஆகிய சிறப்பம்சங்களினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அரசியல் மற்றும் ஏனைய வேறுப்பாடுகளை துறந்து அனைவரும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு நீங்கள் அழைப்பு விடுத்தீர்கள்.

மனிதர்களின் அடிப்படை கடமை,மனிதர்களுக்கு சேவை புரிவது என்ற எமது கட்சியின் அடிப்படை கொள்கைக்கமைய நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம்.

மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஆளும் தரப்பினரால் உங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் ஊடாக அறிய முடிந்தது.இத்தருணத்தில் அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை  இல்லாதொழிக்கும் முயற்சிகள் ஒருதரப்பினரால் எடுக்கப்படுகிறது.

ஊழல்வாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைகார்கள அரச நிதி மோசடியாளர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.நாட்டு மக்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தற்போது மிக தெளிவாக உள்ளார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்களால் புறக்கணிக்கப்படும் அல்லது கடுமையாக விமர்சனத்திற்குள்ளான தரப்பினருக்கு அரசியல் ரீதியில் எவ்வித வரபிரசாதங்களையும் வழங்க கூடாது.சட்டவாட்சி கோட்பாட்டிற்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11