(எம்.வை.எம்.சியாம்)
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 10 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரஹரா மாவத்தையில் வைத்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை, சட்டவிரோதமாக மக்களை ஒன்று கூட்டியமை, ஊரடங்கு உத்தரவை மீறியமை, பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 51 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பிடபெத்தர மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM