(இராஜதுரை ஹஷான்)
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது. வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனையுடனான யோசனைகளை முன்வைத்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்கட்டண திருத்தம் பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்கட்டண அதிகரிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு சேவை கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.
1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலக்கரி மற்றும் புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட்ட போது சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்புக்கள் தோற்றம்பெற்றன.
இருப்பினும் அத்துறைகள் மறுசீரமைக்கப்பட்டன. உரிய காலத்தில் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத்தியாவசியமானது.
வாழ்க் வாழ்க்கை செலவு அதகரிப்பினால் நாட்டு மக்கள் குறிப்பாக வறுமை கோட்டில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்னகள்.ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனைகளை சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் முன்வைத்துள்ளன.
வாழ்வில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM