(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குககளை, அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் மற்றும் விமான நிலைய நடவடிக்ககைளில் 49 சதவீதப் பங்கினையும் அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் திட்டத்திற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் ,
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் தற்போது ஓரளவு இலாபமீட்டுகின்றது. இந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகள் மற்றும் அதன் நிர்வாக நடவடிக்கையை முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இதனை அதிகரித்து கோருமிடத்து அவர்கள் கோரும் பங்கிளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
இதன் மூலம் அவர்களிடமிருந்து குறிப்பிட்டவொரு தொகை அறவிடப்படும். இதன் மூலம் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன்களை மீள செலுத்த முடியும். இதன் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் தொகை ஓரளவு குறைவடையும். அத்தோடு வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 49 சதவீதத்தின் ஊடாக குறிப்பிட்டளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமானத்தின் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையை முற்றாக கடன் சுமையிலிருந்து மீட்பதே எமது இலக்காகும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM