உலகளவில் ஒரு மில்லியன் குழந்தைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு நியுரோபிளாஸ்டோமா எனப்படும் நரம்பு செல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை குணப்படுத்த தற்போது ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நியூரோபிளாஸ்டோமா என்பது உடலின் பல பகுதிகளில் காணப்படும் முதிர்ச்சி அடையாத நரம்பு திசுக்கட்டிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகும். இத்தகைய பாதிப்பு குழந்தை பிறந்து ஓராண்டு முதல் ஐந்தாண்டுகளுக்குள் ஏற்படுகிறது.
இவை பெரும்பாலும் அட்ரினல் சுரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகிறது. இதை தவிர்த்து வேறு சிலருக்கு அடிவயிறு, மார்பு, கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு அருகிலும் உருவாக கூடும். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளில் மிக அரிதாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் சில பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பின் அறிகுறி இருந்தாலும் அவை நாளடைவில் தானாக சரியாகிவிடும். இதன் அறிகுறிகள் தொடர்ந்து நாட்கணக்கில் நீடித்திருந்தால் இதற்கு சிகிச்சை அவசியம்.
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அடி வயிற்றுப் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், மூச்சு திணறல், நெஞ்சு வலி, கண்களை சுற்றி கருவளையம், தோலின் கீழ்ப்பகுதியில் கட்டிகள், முதுகு வலி, காய்ச்சல், திடீர் எடை இழப்பு, எலும்பு வலி போன்ற அறிகுறிகள் தோன்றினால் அவை உடலின் வேறு பகுதியில் பாதிப்பை உண்டாக்கி இருக்கக்கூடும்.
இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை, எலும்பு மஞ்ஜை பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வர். அதன் பிறகு புற்றுநோய் பாதிப்பின் நிலைகளை ஆராய்ந்து சிகிச்சையை தீர்மானிப்பர்.
சத்திர சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை, இம்யுனோதெரபி ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டு முதன்மையான மற்றும் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இதற்கு தற்போது MIBG தெரபி எனப்படும் ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நியுரோபிளாஸ்டோமா எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறார்கள்.
டொக்டர் ராஜ்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM