(எம்.வை.எம்.சியாம்)
கம்பஹா பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் நேற்று கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 6 பேர் கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளங்குடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 23,24,26,29 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பெதியகொட, மாகேவிட மற்றும் கொடுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொனஹென விசேட அதிரடிப்படையினர் மற்றும் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM