துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு : 6 பேர் கைது

Published By: Digital Desk 3

27 Aug, 2022 | 12:26 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கம்பஹா பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

சந்தேகநபர்கள் நேற்று கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 6 பேர் கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும்   உள்ளங்குடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 23,24,26,29 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பெதியகொட, மாகேவிட மற்றும் கொடுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொனஹென விசேட அதிரடிப்படையினர் மற்றும் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38