'நலமான நாளுக்காக இன்றே பணியை தொடங்குவோம்' தேசிய நீரிழிவு தின நடைபவனி இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமானது.
அந்த நடைபவனி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் முடிவடைந்தது. அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அனைவருக்கும் முன்மாதிரியான இந்த நிகழ்ச்சியை பாராட்டிய ஜனாதிபதி, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பும் அக்கறையும் மிகவும் முக்கியமானதென்பதை சுட்டிக்காட்டினார்.
தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக நடைபெற்ற அகில இலங்கை சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றோரின் சித்திரங்கள் அடங்கிய கண்காட்சியும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 14ஆம் திகதியில் வரும் தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் அலகு மற்றும் சிறுநீரக நிபுணர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நடைபவனியில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால, இலங்கை சிறுநீரக நிபுணர்கள் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி உதித் புளுக்ககே, இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி நோயெல் சோமசுந்தரம் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM