நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் தாக்கத்தால் பல குடும்பங்களில் உள்ள வயது வந்த பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் விட்டுவிட்டு தொழிலில்களில் ஈடுபட தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலைவாசிக்கு முகங்கொடுக்க முடியாது நாளாந்த வாழ்க்கையை நகர்த்த தள்ளாடுகின்றன.
இவ்வாறு வீட்டுவேலைக்கு சென்ற நிலையில், நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்த மஸ்கெலியா சிறுமி தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன.
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான ரமணி என்ற சிறுமி, 6 மாதங்களுக்கு முன்வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். பிரபல அரசியல்வாதியொருவரின் உறவினர் ஒருவரின், கம்பஹாவிலுள்ள வீட்டிலேயே குறித்த சிறுமி பணி புரிந்துள்ளார். குறித்த சிறுமி அங்கு வேலைசெய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், சடலம் விசாரணைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
இதேபோன்று சில மாதங்களுக்கு முன் இதேபோன்ற சம்பவம் டயகம சிறுமிக்கு ஏற்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் தீக் காயங்களுக்குள்ளானதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கபட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து இந்த விடயம் முழு நாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு தொழில்களுக்குச் சென்று உயிரிழக்கும் சிறுவர், சிறுமிகள் தெரடர்பில் கடந்த காலங்களிலும் பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவற்றுக்கு எவ்வித தீர்வுகளும் கிடைப்பதில்லை.
பாடசாலைக் கல்வியை கற்க வேண்டிய சிறுவர்கள், சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப் படுவதும் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் இறுதியில் அது தற்கொலை என்று மூடப்படும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
எத்தனையோ வீதி நாடகங்கள், கூட்டங்கள், அமைப்புக்கள் மூலம் விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நகரப்புறங்களில் கடைகளிலும் பணம் படைத்தவர்களின் வீடுகளிலும் வேலைக்காக சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுவது அல்லது பெற்றோர்களினால் விரும்பி அனுப்பப்படுவது என்பது புதிய விடயம் அல்ல. கல்வியை இடைநடுவே விட்டு விட்டு ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்லுபவர்களும் அதிகம். இது போன்ற சம்பவங்களுக்கு தரகர்களை மாத்திரம் குறை கூற முடியாது. அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் மாத்திரமே காணப்படும்.
பெற்றோர்களே தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு முழுப்பொறுப்புக்குரியவர்கள். ஆனால் அந்த பொறுப்பை சில பெற்றோர் சரிவர செய்வதில்லை என்பதே உண்மை.
பாடசாலைக்குச் செல்ல வேண்டிய வயதில் ஒரு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்க வேண்டிய தார்மீக கடமையாகும். பிள்ளைகளை பெற்றெடுப்பது என்பது மாத்திரம் பெற்றோரின் கடமையல்ல, அந்தப் பிள்ளைகளை சமூகத்திற்கு மிக சிறந்த பொக்கிசஷமாக கொடுக்க வேண்டும்.
சமூகத்தின் நாளைய தூண்களான பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களை அடுத்து ஆசிரியர்களுக்கும் உண்டு, இலவசக் கல்வியை பிள்ளைகள் தொடரமுடியாமல் பாடசாலையைவிட்டு இடைவிலகுவதற்கு யார் காரணம் என்று சிந்தித்தால் சமூகத்தின் அத்தனை பேரும்தான் காரண கர்த்தாக்கள் ஆகின்றோம்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த விடயத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் நிலை மாறவேண்டும்.
வீ.பி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM