(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 24 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி-கலஹா
கலஹா - பெல்வுட் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதுடைய பெல்வுட், கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
உயிரிழந்தவரின் வீட்டில் தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் நண்பர்கள் மூலம் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்
சம்பவம் தொடர்பில் பெல்வுட் பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 52 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
வெலிமட
வெலிமட - சாப்புகடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த 22 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பெண் 24 ஆம் திகதி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எதிரில்லகின் பிரதேசத்தில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய புரங்வெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய ஒருவர் எனவும் சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கந்தானை
கந்தானை - கபுவத்த பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் 64 வயதுடைய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவரினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
33 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM