பெண்களின் கவனத்துக்கு...

Published By: Devika

25 Aug, 2022 | 10:19 AM
image

பெண்கள் மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியல், நுரையீரல், கர்ப்­­பப்பை வாய், தோல் மற்றும் கருப்பை புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்­படு­கி­றார்கள். 

புற்றுநோய் உடல்நிலையை பாதிப்ப­தோடு மட்டுமில்லாமல், பல்­வேறு உணர்வு மாற்றங்களால் மன­நிலையையும் பாதிக்கிறது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்டி­ருப்பதை தெரிந்துகொண்டதுமே, பலருக்கு மரணத்தைப் பற்றிய பயமும், பதற்றமும் தன்னிச்சையாக எழுகிறது. இருப்பினும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயை குண­மாக்குவது சாத்தியமே. 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் உறுதியாக இருப்பது முக்கியம். அப்போதுதான், அந்த நோயை எதிர்த்து போராடும் காலத்தில் எழும் எதிர்மறையான சிந்தனைகளை வெல்ல முடியும். 

மன ஆரோக்கியத்தை பேணுவ­தற்கான சில வழிமுறைகள். 

உடல் நிலையை எண்ணி வருந்தக்­கூடாது. சிகிச்சை பெறும் காலத்தில் உடல் எடை குறைதல், முடி கொட்டுதல், முகமாற்றம், சோர்வு என பல மாற்­றங்­கள் உட­லில் நிகழும். அதை எண்ணி வருந்துவதற்கு மாறாக, வலிமையை அதிகரிப்ப­தில் கவனம் செலுத்த வேண்டும். 

பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் வெளி உலகத்தையும், பிறரை தொடர்பு கொள்வதையும் தவிர்த்துவிடுவார்கள். அவ்வாறு செய்யாமல் எப்பொழு­தும்போல குடும்பத்தினருடனும், நண்­பர்களு­டனும் நேரத்தை செலவிட வேண்டும். அப்பொழுதுதான் ‘நாம் நோயாளி’ எனும் எதிர்மறை எண்ணம் எழாது. 

தனிமையில் இருப்பதை தவி­ருங்­கள். எதிர்மறை எண்ணங்களான கவலை, மன­அழுத்தம், சோர்வு, பதற்­றம், தூக்கமின்மை போன்றவை தனி­மையில் இருப்ப­வர்களை அதிக­மாக பாதிக்கும். எனவே தனியாக இருப்பதை விடுத்து பிறருடன் நேரத்தை செலவிடலாம். 

மனதுக்கு பிடித்த செயல்களில் ஈடு­படுங்கள். செய்யும் செயல்களை மகிழ்ந்து விரும்பிச் செய்தால் புத்து­ணர்வு எழும். 

புற்றுநோயாளிகள் மற்றும் அதில் இருந்து மீண்டு வெற்றிகரமாக உயிர் பிழைத்தவர்களுடன் பேசுவது, புற்று­நோயை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். 

உடற்பயிற்சி, தியானம் ஆகியவை அமைதியை தருவதோடு உடலையும், மனதையும் சமநிலையில் வைத்துக்­கொள்ள உதவும். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை புற்று­நோயை எதிர்த்து போராட உதவும் கேடயங்­களாகும். 

மேற்கூறிய குறிப்புகளை பின்பற்­றுவ­தோடு, புற்றுநோய் உங்களின் முடிவு அல்ல, அதை எதிர்த்துப் போரா­டிய எண்ணற்ற பெண்கள் தங்கள் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right