(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் தற்போது கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனினும் அதனால் ஏற்படக் கூடிய பாரதூர தன்மை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியால் கொவிட் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைந்தால் அது எந்நேரத்திலும் பேரழிவை ஏற்படுத்தும். இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தவில்லை.
கொவிட்-19 பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்ட மட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. பாடசாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
கொவிட் வைரஸ் மீண்டும் பரவினால் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM