இந்திய விவசாயி ஒருவர், 2 மாடிகள் கொண்ட தனது வீட்டை முழுமையாக 500 அடி தூரம் நகர்த்திச் செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
சுக்விந்தர் சிங் சுகி என்பவருக்குச் சொந்தமான வீடு இது. பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் பிரதேசத்தின் ரோஷன்வாலா கிராமத்தில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இவ்வீடு அமைந்துள்ள பகுதி வழியாக அதிவேக நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதால் அவ்வீட்டை தகர்க்குமாறு அதிகாரிகள் கோரினர். இதற்காக இழப்பீடும் வழங்கப்பட்டது.
எனினும், புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கு தான் விரும்பவில்லை என சுக்விந்தர் சிங் சுகி கூறியுள்ளார்.
இதனால், அவ்வீட்டை முழுமையாகப் பெயர்த்து 500 அடி (152.4 மீற்றர்) தூரம் நகர்த்தி வேறு இடத்தில் கொண்டு சென்று வைப்பதற்கு சுக்விந்தர் சிங் தீர்மானித்தார்.
இதற்கு பதிலாக மற்றொரு வீட்டை நிர்மாணிக்க தான் விரும்பவில்லை என்கிறார் அவர்.
இது தொடர்பாக சுக்விந்தர் சிங் சுகி கூறுகையில், '2017 ஆம் ஆண்டு இவ்வீட்டை நிர்மாணிக்க ஆரம்பித்தேன். 2019 ஆம் ஆண்டு அது நிறைவடைந்தது. தற்போது அதிவேக நெடுஞ்சாலைக்கு மத்தியில் இவ்வீடு வருகிறது.
அதனால் நான் வீட்டை வேறிடத்துக்கு கொண்டு செல்ல தீர்மானித்தேன். இதற்கு 40 லட்சம் ரூபா செலவாகும். இந்த 40 லட்சம் ரூபா செலவில் புதிய வீட்டை நிர்மாணிக்குமாறு சிலர் என்னிடம் கூறுகின்றனர். ஆனால், இது எனது கனவு வீடு. மிகப் பெறுதியான மர வேலைப்பாடுகள் இவ்வீட்டில் செய்யப்பட்டுள்ளன.
இழப்பீட்டுத் தொகையில் இது போன்ற வீட்டை நிர்மாணிக்க முடியாது. தற்போது பணவீக்கத்தை கருத்ததிற்கொண்டால், வீட்டின் பெறுமதியைவிட குறைந்த தொகையே எனக்கு கிடைத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வீட்டை நகர்த்தும் ஒப்பந்தம் மொஹம்மத் ஷஹீத் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டை நகர்த்துவதற்கு வீட்டின் அடியில் சுரங்கம் அமைத்து, வீட்டை அத்திவாரத்துடன் முழுமையாக உயர்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக மொஹம்மத் ஷஹீத் கூறுகையில், இதற்கு முன்னரும் வீடுகளை நான் நகர்த்தியுள்ளேன். ஆனால் அவை 5 முதல் 10 அடி தூரமே நகர்த்தியுள்ளேன். 500 அடி என்பது நீண்ட தூரம். எனினும் அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். சுமார் 20 பேர் இதில் பணியாற்றுகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
தினமும் 5 முதல் 10 அடி தூரமே இவ்வீடு நகர்த்தப்படுகிறது. தற்போது 250 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. இதை முழுமையாக நகர்த்துவதற்கு 2 மாத காலம் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய மத்திய அரசின் 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ் மேற்படி டெல்லி, அமிர்தசரஸ் --,- கத்ரா அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட வருகிறது.
இந்நெடுஞ்சாலை நிர்மாணம் பூர்த்தியடையும்போது, தலைநகர் புதுடெல்லியையும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் ஊடாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தையும் அது இணைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM