(லோகேஸ்)
கம்பளை கஹட்டபிடியவில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பத்தொன்பது வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நகரில் இருந்து கெலிஓயா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் வேனொன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
முறுத்தகஹமுல்ல அம்தரவல்ல பகுதியை சேர்ந்த எம்.ஜே.எம். அம்ஜத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மோட்டார் சைக்கிளில் கம்பளையில் இருந்து கெலிஓயாவுக்கு சென்று கொண்டிருந்த போது கஹட்டபிடிய பகுதியில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞன் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கம்பளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரனணகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விபத்து தொடர்பாக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM