இறைச்சி வெட்­டு­வ­தாக கனவு கண்டு தனது விதையை வெட்­டிய நபர்

Published By: Vishnu

23 Aug, 2022 | 04:05 PM
image

மனி­தர்கள் உறக்­கத்தில் பேசு­வது, நடப்­பது  போன்­றவை சாதா­ர­ண­மா­னவை. ஆனால், ஆபி­ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒருவர், இறைச்சி வெட்­டு­வ­தாக கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போது நிஜத்தில் தனது விதை­களை வெட்­டி­யுள்ளார்.

47 வய­தான கொபி அட்டா என்­ப­வ­ருக்கே இந்த விப­ரீத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக பிபி­சி­யிடம் பேசி கொபி அட்டா, நான் கதி­ரை­யொன்றில் அமர்ந்­தி­ருந்த நிலையில் உறங்­கி­விட்டேன். உறக்­கத்­தின்­போது, எனக்கு முன்னால் வைக்­கப்­பட்­டி­ருந்த இறைச்­சியை நான் வெட்­டு­வ­தாக கனவு கண்டேன்' எனத் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், இறைச்­சிக்கு பதி­லாக தனது விதைப்­பை­யையே அவர் வெட்டிக் கொண்டார். 

ஏறத்­தாழ கனவு நிலை­யி­லேயே அவர், அய­ல­வர்­களை உத­விக்கு அழைத்­தாராம். 

அய­வ­லர்கள் அங்கு வந்­த­போது, கொபி அட்­டாவின் அந்­த­ரங்க உறுப்­பி­லி­ருந்து இரத்தம் வழிந்­தோ­டிய நிலையில், கடும் வலியை அவர் அனு­ப­வித்தார். எனினும், என்ன நடந்­தது என்­பதை அவ­ருக்கே புரி­ய­வில்லை.

அதிக இரத்தம் வெளி­யே­றிய நிலையில் வைத்­தி­ய­சா­லை­யி­லேயே அவர் கனவு  நிலை­யி­லி­ருந்து மீண்­டாராம்.

அப்­போ­துதான், இறைச்­சிக்குப் பதி­லாக தனது விதை­களை வெட்­டிக்­கொண்­டதை அவர் உணர்ந்தார்.

அவ­ருக்கு ஏற்­பட்ட காயங்­க­ளுக்கு மருத்­து­வர்கள் சிகிச்சை அளித்­துள்­ளனர். எனினும் முழு­மை­யாக அவர் குண­ம­டை­வ­தற்கு சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் எனத் தெரி­வித்­துள்­ளனர். 

குமாசி நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் இச்சத்திரசிகிச்சையை செய் வதற்காக, நலன் விரும்பிகளிடமிருந்து நிதி சேகரிப்பதற்கு கொபி அட்டா திட் டமிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right