மனிதர்கள் உறக்கத்தில் பேசுவது, நடப்பது போன்றவை சாதாரணமானவை. ஆனால், ஆபிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒருவர், இறைச்சி வெட்டுவதாக கனவு கண்டுகொண்டிருந்தபோது நிஜத்தில் தனது விதைகளை வெட்டியுள்ளார்.
47 வயதான கொபி அட்டா என்பவருக்கே இந்த விபரீத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசி கொபி அட்டா, நான் கதிரையொன்றில் அமர்ந்திருந்த நிலையில் உறங்கிவிட்டேன். உறக்கத்தின்போது, எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை நான் வெட்டுவதாக கனவு கண்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இறைச்சிக்கு பதிலாக தனது விதைப்பையையே அவர் வெட்டிக் கொண்டார்.
ஏறத்தாழ கனவு நிலையிலேயே அவர், அயலவர்களை உதவிக்கு அழைத்தாராம்.
அயவலர்கள் அங்கு வந்தபோது, கொபி அட்டாவின் அந்தரங்க உறுப்பிலிருந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில், கடும் வலியை அவர் அனுபவித்தார். எனினும், என்ன நடந்தது என்பதை அவருக்கே புரியவில்லை.
அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் வைத்தியசாலையிலேயே அவர் கனவு நிலையிலிருந்து மீண்டாராம்.
அப்போதுதான், இறைச்சிக்குப் பதிலாக தனது விதைகளை வெட்டிக்கொண்டதை அவர் உணர்ந்தார்.
அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் முழுமையாக அவர் குணமடைவதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
குமாசி நகரிலுள்ள வைத்தியசாலையில் இச்சத்திரசிகிச்சையை செய் வதற்காக, நலன் விரும்பிகளிடமிருந்து நிதி சேகரிப்பதற்கு கொபி அட்டா திட் டமிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM