உரிய நேரத்தில் சிறந்த தீர்மானங்களை எடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள் - வாசு

Published By: Digital Desk 3

23 Aug, 2022 | 04:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்பார்க்கிறார்கள். 

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனைத்து கட்சிகளின் வகிபாகத்துடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒன்றிணைத்த நிலையில் ஒரு கட்டமைப்பற்ற அரசாங்கம் மாத்திரமே அமைக்கப்படும்.முறையற்ற வகையில் ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாக எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்பதை அரசியல் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப் பெற வேண்டும் என்ற நோக்கம் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உண்டு.

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகோதர பாசத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட்டார்.அரசியல் ரீதியில் பஷில் ராஜபக்ஷ தன்னிச்சையாக செயற்படும் போது அது குறித்து அவர் அவதானம் செலுத்தாமலிருந்தது பிரதான குறைப்பாடாகும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04