(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்பார்க்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனைத்து கட்சிகளின் வகிபாகத்துடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒன்றிணைத்த நிலையில் ஒரு கட்டமைப்பற்ற அரசாங்கம் மாத்திரமே அமைக்கப்படும்.முறையற்ற வகையில் ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாக எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்பதை அரசியல் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப் பெற வேண்டும் என்ற நோக்கம் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உண்டு.
மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகோதர பாசத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட்டார்.அரசியல் ரீதியில் பஷில் ராஜபக்ஷ தன்னிச்சையாக செயற்படும் போது அது குறித்து அவர் அவதானம் செலுத்தாமலிருந்தது பிரதான குறைப்பாடாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM