சிறார்களுக்கு போதைப்பொருட்களைக் கொடுத்து, அவர்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி படம்பிடித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதையடுத்து அந்நபருக்கு 60 வருட சிறைத்தண்டனையம் அவரின் மனைவிக்கு 20 வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதான ஸ்டீபன் ஏ வில்சன் என்பவருக்கே 60 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவியான ஜெசிக்கா ஏ வில்சனுக்கு (38) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 7 முதல் 16 வயதான பல சிறார்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதை படம்பிடித்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்டது.
இவர்களுக்கு எதிராக 3 சிறார்கள் சாட்சியம் அளித்தனர். அதையடுத்து சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டை ஸ்டீபன் வில்சன் ஒப்புக்கொண்டார். அதேவேளை சிறுவர் பாலியல் வீடியோ விநியோகித்த குற்றச்சாட்டை ஜெசிக்கா ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட 7 வயதான ஒரு சிறுமி சாட்சியமளிக்கையில், தனக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருள் வழங்கப்பட்டு, தான் அரை உணர்விழந்திருந்த நிலையில், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார்.
இவ்வன்முறை 22 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் பதிவாகியிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
தவழும் குழந்தைகள் சிறார்களை துஷ்பிரயோகப்படுத்தும் காட்சிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான புகைப்படங்களை போட்டோஷொப் மூலமும் ஸ்டீபன் வில்சன் உருவாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஆயிரக்கணக்கான உரையாடல்களை ஸ்டீபன் வில்சனும் ஜெசிக்காவும் தொலைபேசி, குறுஞ்செய்திகள் மூலம் மேற்கொண்டிருந்ததையும் பொலிஸார் கண்டறிந்தனர்.
ஜெசிக்காவின் சட்டத்தரணி வாதாடுகையில், ஜெசிக்காவும் சிறு வயதில் 5 வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.
17 வயதில் ஸ்டீபன் வில்சனை ஜெசிக்கா திருமணம் செய்ததாகவும் இத்தம்பதியினருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர் எனவும் நீதிமன்றில் தெரிவிக் கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM