தாய்லாந்து கடற்கரையொன்றில், கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கூறி பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், அது ஒரு பாலியல் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள சோன்பூரி மாவட்டத்தின் பாங் சீன் மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு கரையொதுங்கியிருந்த உருவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நிர்வாண கோலத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக மக்கள் எண்ணினர். அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ன அச்சமும் எழுந்தது.
இதனால் அவசரசேவைப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதையடுத்து பொலிஸாரும், மருத்துவ உத்தியோகத்தர்களும் அக்கடற்கரைக்கு விரைந்தனர்.
எனினும், தாம் நெருங்கிச் சென்று பார்த்தபோது, அது ஒரு பாலியல் பொம்மை எனத் தெரியவந்தது என தாய்லாந்து பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
'அந்த பொம்மையின் தலை காணப்படவில்லை. இணையத்தில் தேடி பார்த்தபோது, அது சுமார் 20,000 தாய்லாந்து பாத் விலையுள்ளது என்பது தெரியவந்தது' எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த பொம்மை ஆறு அல்லது கால்வாயில் வீசப்பட்ட நிலையில் கடலுக்கு அடித்து வரப்பட்டிரக்கலாம்.
உல்லாசப் பயணிகள் அச்சமடைவதை தவிர்ப்பதற்காக கடற்கரையிலிருந்து அந்த பொம்மை அகற்றப்பட்டுள்ளது.
பொம்மையின் உரிமையாளர் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்பினால், மீட்புக் குழு நிலையத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம்' எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM