வடமலை ராஜ்குமார்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர் செயற்பாட்டளர்களை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை 3 ஆம் கட்டை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்கு மனித உரிமைப் பாதுகாவலர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தினர்.
அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது,
அனைத்துப் பல்கலைக கழக மாணவா ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம்.
இலங்கையின் வடக்கு கிழக்கைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, மேதகு ஜனாதிபதியான தங்களிடம் 18 ஆவணி 2022 அன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்கக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளாகும்.
இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டின் சக பிரஜைகளுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிப்படுத்து வதற்காக பயன்படுத்தினர் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தொழிற்சங்க நடடிவடிக்கைகளும் வெகுஜனப் போராட்டங்களும் பயங்கரவாத நடிவடிக்கைகள் அல்ல. மாணவ செயற்பாட்டாளார்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
எனவே, பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாமெனக் கோருகிறோம்.
இலங்கையில் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராவார். அவ்வகையில், எவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
எனவே தங்களின் மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கிழ் தடுத்து வைப்பதற்கான தடுப்புக் காவல் கட்டளைப் பத்திரத்தில் கைச்சாத்திட வேண்டாம் எனக் கோருகிறோம்.
இலங்கையின் வடக்கு கிழக்கை சார்ந்த சிறுபான்மைத் தமிழர்களான நாம் தற்போதும் கொடூரமான பயகரவாதத் தடைச்சட்டத்தின் மனிதத்தன்மையற்ற துன்புறுத்தலை இன்றுவரை அனுபவித்து வருவதோடு, அச்சட்டத்தின் காட்டுமிராண்டித்தனமான சுபாவத்தினை நேரடியாக எதிர்கொண்ட அனுபவங்களும் எமக்கு உண்டு. பதின்ம வயதில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் 30 – 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்து வருகின்றனர். சிலர் வெளிச்சத்தைக் காணாது சிறைக்குள்ளேயே மாண்டுபோயினர்.
இலங்கையின் சிறுபான்மை மக்களான எம்மைப் பொறுத்தவரையில், இந்நாட்டில் யாரும் இனிமேல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடாது. அறவழிப் போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுவிக்குமாறு தங்களைக் கோருகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM