(எம்.மனோசித்ரா)
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 100 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கிடைக்கப் பெற்றதையடுத்து சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 120 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்ட கப்பல் இவ்வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 40 தினங்களுக்கு எவ்வித தடையும் இன்றி சுத்தீகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுப்பர் டீசல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் உற்பத்தி முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் , ஒட்டோ டீசல், ஒக்டேன் 92 ரக பெற்றோல், கனரக எரிபொருள் எண்ணெய்/உலை எண்ணெய், ஜெட் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் என்பனவே இங்கு உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM