(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சி தேர்தலை நடத்துதல் மற்றும் காலம் தாழ்த்துதல் குறித்த அதிகாரங்கள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
எனவே அது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். அத்தோடு செப்டெம்பர் 20 க்கு பின்னர் வெகுவிரைவில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
20 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேர்தல்களை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு காணப்படுகிறது. எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு சட்ட ரீதியாக எம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதனை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
மாகாணசபை தேர்தல் நீண்ட காலமாக காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே அதனை விரைவில் நடத்த வேண்டும் என்று நாம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.
தெரிவுக்குழு சந்தர்ப்பங்களின் போதும் , இந்த தேர்தல் சட்டம் குறித்து நாம் கடுமையாக வலியுறுத்தியிருந்தோம். அதற்கமைய பாராளுமன்றத்தில் தற்போது பழைய முறைமையில் சிறு சட்ட திருத்தங்களுடன் தேர்தலை நடத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல்களும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. அமைச்சரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தலை காலம் தாழ்த்துவது தொடர்பில் அமைச்சருக்குள்ள அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோருகின்றோம்.
காரணம் அமைச்சரால் நன்மைக்காக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் , வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது அரசியல் நோக்கத்திற்காக என்றே தென்படும்.
எனவே தான் அந்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு , அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோருகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதம் வரை உள்ளுராட்சி தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைக்கப்பெறும். அதற்கமைய விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM