செப்டெம்பர் 20 க்கு பின் விரைவில் உள்ளுராட்சி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா

Published By: Vishnu

21 Aug, 2022 | 02:25 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சி தேர்தலை நடத்துதல் மற்றும் காலம் தாழ்த்துதல் குறித்த அதிகாரங்கள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே அது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். அத்தோடு செப்டெம்பர் 20 க்கு பின்னர் வெகுவிரைவில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

20 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தல்களை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு காணப்படுகிறது. எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு சட்ட ரீதியாக எம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதனை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.

மாகாணசபை தேர்தல் நீண்ட காலமாக காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே அதனை விரைவில் நடத்த வேண்டும் என்று நாம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

தெரிவுக்குழு சந்தர்ப்பங்களின் போதும் , இந்த தேர்தல் சட்டம் குறித்து நாம் கடுமையாக வலியுறுத்தியிருந்தோம். அதற்கமைய பாராளுமன்றத்தில் தற்போது பழைய முறைமையில் சிறு சட்ட திருத்தங்களுடன் தேர்தலை நடத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தல்களும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. அமைச்சரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்தலை காலம் தாழ்த்துவது தொடர்பில் அமைச்சருக்குள்ள அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோருகின்றோம்.

காரணம் அமைச்சரால் நன்மைக்காக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் , வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது அரசியல் நோக்கத்திற்காக என்றே தென்படும்.

எனவே தான் அந்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு , அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோருகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதம் வரை உள்ளுராட்சி தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைக்கப்பெறும். அதற்கமைய விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02