K.B.சதீஸ்
வவுனியாவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இனறு 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ 9 வீதியூடாக கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது வவுனியா ஏ9 வீதி தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய ஆனந்தகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த லொறியானது சட்டவிரோதமாக கால்நடைகளை கொழும்பிற்கு ஏற்றிச்சென்ற வேளையே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM