லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - இளைஞன் மரணம்

Published By: Vishnu

21 Aug, 2022 | 01:05 PM
image

K.B.சதீஸ் 

வவுனியாவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இனறு 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ 9 வீதியூடாக கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தானது வவுனியா ஏ9 வீதி தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய ஆனந்தகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மேலும் குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. 

இதேவேளை குறித்த லொறியானது சட்டவிரோதமாக கால்நடைகளை கொழும்பிற்கு ஏற்றிச்சென்ற வேளையே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10