வெல்லாவெளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட யானைகட்டியவெளி பிரதேசத்தில் இன்று (19) காலை குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டூர் மூன்றாம் பிரிவிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி யோகநாதன் என்பவரே இச் சம்பவத்தில் பலியானவராவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து வேளாண்மை வயலினை பார்வையிடுவதற்காக சென்ற போது வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த யானை குறித்த நபரினை தாக்கியதில் சம்ப இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலினால் பல மனித உயிர்களை இழந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM