சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அழிந்துபோன தாஸ்மேனிய புலி இனத்தை மீண்டும் உருவாக்குவற்கு விஞ்ஞானிகள் உறுதிபூண்டுள்ளனர்.
தைலசைன் என உத்தியோகபூர்வமாக குறிப்பிடும தாஸ்மேனிய புலிகள், 2000 ஆண்டுகளுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா தீவைத் தவிர்ந்த உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து மறைந்தன.
1800களில் தாஸ்மேனியாவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தாஸ்மேனிய புலிகளால் தமது கால்நடைகளை இழந்தனர். இதனால், தாஸ்மேனியப் புலிகளை அவர்கள் தீவிரமாக வேட்டையாடினர். அந்த இனமே அழிந்து போகும் அளவுக்கு இந்த வேட்டை தொடர்ந்தது.
பிடித்து வைக்கப்பட்டிருந்த தாஸ்மேனிய புலிகளில் பெஞ்சமின் என பெயரிடப்பட்ட புலி இறுதியாக எஞ்சியிருந்தது. தாஸ்மேனியாவின் ஹோபார்ட் நகரிலுள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் வசித்த இந்த தாஸ்மேனிய புலி 1936 ஆம் ஆண்டு இறந்தது.
தாஸ்மேனிய புலி இனமானது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக பிரகடனப்படுத்தப்பட்டு சிறிது காலத்தில் பெஞ்சமின் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, உலகிலிருந்து மறைந்துவிட்டு தாஸ்மேனிய புலி இனத்துக்கு உயிரூட்டுவதற்கு விஞ்ஞானிகள் உறுதிபூண்டுள்ளனர்.
இப்புலி இனத்தின் எஞ்சியுள்ள மரபணு மாதிரிகளைப் பயன்படுத்தி, செயற்கை இனப்பெருக்க முறையில் இப்புலி இனத்தை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
கொலோசால் பயோசயன்ஸ் எனும் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களான தொழிலதிபர் பென் லாம், உலகப் புகழ்பெற்ற மரபணு விஞ்ஞானியான கலாநிதி ஜோர்ச் சேர்ச், தாஸ்மேனிய புலிகள் தொடர்பான நிபுணர் கலாநிதி அண்ட்ரூ பாஸ்க் முதலானோர் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
செயற்கை கருப்பை உருவாக்கம் உட்பட பல சிக்கலான படிமுறைகளை இத்திட்டம் கொண்டுள்ளது. சுமார் 15 மில்லியன் டொலர் செலவில் இத்திட் டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM