எங்களை விட்டுவிடுங்கள்; எங்காவது போய் விடுகிறோம் – சிம்புவின் தாய் உருக்கம்
என் மகனை தூக்கிலிட வேண்டும் என்கிறீர்கள். தூக்கில் போடுமளவு என் மகன் என்ன செய்தான். உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த பொலிஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக்கொள்ளுங்கள்.எங்களை விட்டுவிடுங்கள். தமிழ்நாட்டை விட்டு சென்று வேறு எங்காவது போய் பிழைத்து கொள்ளுகின்றோம் என்று சிம்புவின் தயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'பீப் பாடல்' திருடப்பட்ட பாடல், அதனை வெளியிட்டு என் மகன் சிம்பு கலைத்துறையில் வளரக்கூடாது என்று பொறாமையில் செயல்படுகின்றனர். என் குடும்பத்தினருக்கு இனியும் தொந்தரவு கொடுத்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதைத்த தவிர வேறு வழியில்லை
இந்த சினிமாவில் நாங்கள் கஷ்டப்பட்டு ஜெயித்திருக்கிறோம். பீப் பாடல் பெண்களின் மனதை புண்படுத்தியிருந்தால் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். நாங்கள் இதை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்கச் சொல்லி முறைப்பாடு கொடுத்தோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், சிம்புவின் மீது வழக்குப்பதிவு செய்து விரட்டுகின்றனர். சிம்பு என்ன குற்றம் செய்தார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக பண்ணிய பாடல், அதுவும் 'பீப்' போடப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். அதை என்னமோ பெரிய குற்றம் பண்ணிவிட்டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு பொலிஸ் இருக்கிறது. எங்களுக்கு நிம்மதியில்லை 24 மணி நேரமும் வீட்டின் முன்பு கமெரா வும் கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது.
பொலிஸ் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார், அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியாவை விட்டோ எங்கேயும் ஒடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த பொலிஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், 'பீப்' சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அதை வெளியிட்டு இப்படி தொந்தரவு கொடுக்கின்றனர்.
நாட்டில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதை விட்டு விட்டு ஏன் சிம்புவை இப்படி தொந்தரவு செய்கின்றனர் என்று தெரியவில்லை. சிம்புவை பொலிஸ் தேடினால் அவர் பொலிஸில் சரணடைந்து விடுவார். அதற்காக மீடியாக்கள் ஏன் இப்படி எங்கள் வீட்டு முன்பு காத்திருக்க வேண்டும்? எங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது.
உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா? ,
எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிரை எடுத்துக்கொள்ளுங்கள். தூக்கில் போட வேண்டுமா?
வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை.சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை, அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் எந்த நேரம் பார்த்தாலும் கமெராவும்கையுமாகவே இருக்கிறார்கள். எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம்.
என் கணவர் மூன்று முதல்வர்களை எதிர்த்து நின்றிருக்கிறார் அரசியல் ரீதியாக எத்தனையோ கஷ்டங்களை தாங்கி நின்றிருக்கிறோம். ஒன்றுமில்லாத பிரச்சினைக்கு இப்படி ஏன் தொந்தரவு கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை.
சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்ந்தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்.
நன்றி சிம்பு ஒரு சாதாரண நடிகன். பத்து நடிகரோடு அவரும் ஒரு நடிகர். இப்படி கிழி கிழி என்று கிழிப்பதற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது. தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பிழைப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கண்ணீர் மல்க சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM