பாணந்துறை நிறப்பூச்சு உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட 'தின்னர்' வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய மற்றும் நெடுங்கால தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலையை அண்மித்த பிரதேசங்களிலுள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் தாம் எதிர்கொண்டுள்ள சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாணந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே தொழிற்சாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகாலத் தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாணந்துறை கெசல்வத்தை ஜயா மாவத்தையில் அமைந்துள்ள நிறப்பூச்சு உற்பத்தி நிறுவனத்தின் 'தின்னர்' களஞ்சியப்படுத்தும் கொள்கலனிலுள்ள குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் பிரதேசத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டது. அதனால் மூச்சுத்திணறலுக்கு உட்பட்ட பலர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பிரதேசவாசிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தொழிற்சாலையை அண்மித்த நிரியவத்தை கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்கள் பாவிக்கும் குழாய் நீருக்குப் பதிலாக சுத்தமான நீர் பெற்றுக் கொடுப்பதற்கும் சில நாட்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கும் தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பிரதேசத்தினூடாகச் செல்லும் வடிகான்களில் தேங்கியுள்ள இரசாயனப் பதார்த்தங்களை நீக்கி வடிகானை சுத்தப்படுத்துவதற்கும், தொழிற்சாலையை அண்மித்த பிரதேசத்தில் இரசாயனப் பதார்த்தம் படிந்துள்ள மண்ணை அப்புறப்படுத்துவதற்கும் தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ முகாமொன்றை நடத்தி பிரதேச மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM