(ஏ.என்.ஐ)
ஜம்மு காஷ்மீர் - பாரமுல்லா பகுதியில் 108 அடி உயர தேசியக் கொடி நிறுவப்பட்டது. வடக்கு காஷ்மீரில் முதல் முறையாகும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஸ்லாரியா, இவ்வாறு தேசிய கொடி நிறுவப்பட்டமை இதுவே வடக்கு காஷ்மீரில் முதன்முறையாகும் என குறிப்பிட்டார்.
இதற்காக இப்பகுதி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்'.'ஹர் கர் திரங்கா' என்பது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பிரச்சாரமாகும்.
இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் அதை ஏற்றி வைக்கவும் மற்றும் இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாறு வெளிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்தத் திட்டம் எல்லா இடங்களிலும் உள்ள இந்தியர்களை தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கிறது.
தேசியக் கொடியுடனான உறவை சம்பிரதாயமாகவோ அல்லது நிறுவனமாகவோ வைத்திருப்பதை விட தனிப்பட்டதாக மாற்றுவதே திட்டத்தின் நோக்கமாகும். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் அதிகாரப்பூர்வ ஆரம்பம் 2021 மார்ச் 12 திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM