(எம்.வை.எம்.சியாம்)
தொம்பே பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். குறித்த விபத்து 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல- கிரிதர பிரதான வீதியின் தித்தபத்தர பிரதேசத்தில் பமனபெத்த பிரதேசத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் அதில் பயணித்த மற்றைய நபரும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் ஹங்வெல்ல மற்றும் வக பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM