இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்காக மீண்டும் ஒருமுறை இந்தியாவைப் பாராட்டுவதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதுடன் ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவை விமர்சிக்கும் மேற்குலக நாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.
லாகூரில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே இம்ரான் கான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற பிராட்டிஸ்லாவா கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் அறிவிப்பை இதன் போது சுட்டிக்காட்டிய இம்ரான் கான், ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பான அமெரிக்க அழுத்தத்தில் உறுதியாக நின்றதற்காகவும் இந்தியாவை பாரட்டினார்.
பாகிஸ்தானைப் போலவே அதே நேரத்தில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் மக்களின் தேவைக்கேற்ப தங்கள் வெளியுறவுக் கொள்கையை உருவாக்க முடியும் என்றால், தற்போதைய பாகிஸ்தான் ஆட்சியார்ளால் (பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கம்) ஏன் முடிவதில்லை என கேள்வி எழுப்பினார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இந்தியா அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடு, பாகிஸ்தான் அல்ல. ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டபோது இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் என்ன சொன்னார் என்று பார்ப்போம் என கூறியவாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோ காட்சியை இம்ரான் கான் காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM