(எம்.மனோசித்ரா)
இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்காக இலங்கை மற்றும் இந்திய அஞ்சல் அதிகாரிகளால் கூட்டாக முத்திரை வெளியிடப்படவுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்கு இணையாக 'ஜனநாயகம்' எனும் தொனிப்பொருளில் இரண்டு நாடுகளின் 'பாராளுமன்றங்களை' பிரதிபலிக்கின்ற வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் இந்திய அஞ்சல் திணைக்களத்தால் இரண்டு கொண்டாட்ட முத்திரைகள் வீதம் வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டு நாடுகளாலும் வெளியிடப்படும் முத்திரைகளில் 3,000 முத்திரைப் பொதிகளும், 5,000 நினைவுப் பத்திரங்களும், 2,000 முதல் நாள் அட்டைகளையும் பரிமாற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த பணிகளுக்காக இரண்டு நாடுகளின் அஞ்சல் திணைக்களங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM