(எம்.மனோசித்ரா)
பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும் இந்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்த அவர், வெவ்வேறு பாராளுமன்ற பதவிகள், நிறுவனங்களுக்கான தலைமைத்துவத்தை பகிர்ந்தளித்தல் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடந்த வாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை எட்டி , பொருளாதார - சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சர்வகட்சி வேலைத்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய ஆரம்பத்திலிருந்து இதுகுறித்த கலந்துரையாடல்களில் பங்குபற்றிய கட்சிகள் மற்றும் சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கான அவற்றின் பரிந்துரைகள் தொடர்பான ஆவணம் ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இந்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையவில்லை.
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காகவே இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய எதிர்வரும் தினங்களில் பாராளுமன்ற நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சிகளுக்கிடையில் வெ வ்வேறு பாராளுமன்ற பதவிகள், நிறுவனங்களுக்கான தலைமைத்துவத்தை பகிர்ந்தளித்தல் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM